Sunday, June 20, 2010
வலி உன்னை வளர்த்தெடுக்கும் தாய்
வலி உன்னை வளர்த்தெடுக்கும் தாய்
வலி
உன்னை
வளர்த்தெடுக்கும் தாய்
உன்னை
உனக்கே உரித்துக்காட்டும்
அம்மணம்
தேடாத விழிகளில்
திசைகளெல்லாம்
ஊமைகளாய் மூடிக்கிடக்கும்
வலியே
தேடலின் வல்லமை
உன் உண்மை முகவரியை
எழுதும் முள்
இருட்டை உடைத்து
வெளிச்ச வழி குடையும்
சிற்றுளிகளின் பேரியக்கச் சக்தி
மனிதா
நீ எப்போதும்
எதையும் வென்றதே இல்லை
உன் தோல்விகள்தாம்
ஒன்றுகூடி
வலிகள் பெறுக்கி
வெற்றியிடம் உன்னை
அடித்து இழுத்துக்
கொண்டுபோய்ச் சேர்க்கின்றன
Subscribe to:
Posts (Atom)